நாகப்பட்டினம்

சவூதி அரேபியாவில் இறந்தவரின் வாரிசுக்கு ரூ.19.10 லட்சம் இழப்பீடு

DIN

சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது உயிரிழந்தவரின் வாரிசுக்கு சவூதி அரேபிய அரசால் வழங்கப்பட்ட இழப்பீடு தொகை ரூ.19,10,715-க்கான காசோலையை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ச. கரேல் சூசன்னா. இவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சவூதி அரேபிய அரசால் இந்திய தூதரகத்தின் வாயிலாக வரப்பெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ.19 லட்சத்து 10 ஆயிரத்து 715-க்கான காசோலையை கரேல் சூசன்னாவின் தாயார் சந்திராருத் அன்புச்செல்வியிடம் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT