நாகப்பட்டினம்

சுருட்டுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

கூலி உயர்வு கோரி நாகை மாவட்ட அனைத்து சுருட்டுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சுருட்டுத் தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு, சுருட்டுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.எஸ். குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் பாஸ்கரன், துணைச் செயலாளர்கள் சேகர்,  கமாலுதீன், துணைத் தலைவர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT