நாகப்பட்டினம்

மண்வள அட்டை பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள்

DIN

உரச் செலவை குறைக்கவும், மண்ணின் தன்மை அறிந்து வேளாண் பணிகளை மேற்கொள்ளவும் விவசாயிகள், மண்வள அட்டையைப் பெற முனைப்பு காட்ட வேண்டும் என நாகை வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) புஷ்பகலா தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்படும் மண்வளப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 10 ஹெக்டேருக்கு ஒரு மண்மாதிரி என்ற வகையில், மண் ஆய்வு செய்யப்பட்டு, மண் வளத்துக்கேற்ற உரப் பரிந்துரை, தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைகளைக் குறிப்பிட்டு, விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், நாகையை அடுத்த பாலையூர் கிராமத்தில் அண்மையில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
நாகை வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) புஷ்பகலா தலைமை வகித்துப் பேசுகையில், உரச் செலவைக் கட்டுப்படுத்தவும், மண்ணின் தன்மை அறிந்து வேளாண் பணிகளை மேற்கொள்ளவும் மண்வள ஆய்வு அவசியமாகிறது.  வரும் காலங்களில், மண்வள அட்டை பரிந்துரைப்படி மட்டுமே விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படவுள்ளது என்பதால் விவசாயிகள், மண்வள அட்டையைப் பெற முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
உதவி வேளாண்மை அலுவலர் ராசகுமார், அலுவலர் சத்யா ஆகியோர் பேசினர். விவசாயிகள், வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT