நாகப்பட்டினம்

மதுப்புட்டிகள் பறிமுதல்

DIN


சீர்காழி அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 96 மதுப்புட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் வட்டாட்சியர் இந்துமதி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சீர்காழியிலிருந்து தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வாசுதேவன் என்பவர் சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த மூட்டையைச் சோதனை செய்தபோது, அதில் 180 மில்லி அளவு கொண்ட 96  மதுப்புட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, மதுப்புட்டிகளையும், இருசக்கர வாகனத்தையும் சீர்காழி மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கதிராமங்கலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT