நாகை துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வைர. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, நாகை, நாகை நகரம், நரிமணம், திருமருகல், வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில், சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் :
நாகப்பட்டினம் : நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி, மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை.
நாகை நகரம் : ஓ.என்.ஜி.சி, மாவட்ட ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நாகூர் தர்கா பகுதி.
நரிமணம் : பூதங்குடி, நரிமணம், கொட்டாரக்குடி, வைப்பூர், சூரனூர்.
வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி நகரம், செருதூர், பரவை.
திருமருகல் : திருமருகல், மருங்கூர், எரவாஞ்சேரி, திருப்புகலூர், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.
வேட்டைக்காரனிருப்பு : திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.
சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில்...
சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் சனிக்கிழமை (ஆக.17) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) சு. சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வைத்தீஸ்வரன்கோயில், அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், இத்துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், எருக்கூர், மாதிரிவேளூர், வடரெங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், மாங்கணாம்பட்டு, ஆச்சாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.