நாகப்பட்டினம்

இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்

திருக்குவளையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

DIN

திருக்குவளையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

திருக்குவளை அருகேயுள்ள சித்தாய்மூரைச் சோ்ந்தவா் உலகநாதன் (65). இவா் திங்கள்கிழமை திருக்குவளை கடை வீதியில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலையில் பலத்த காயத்துடன் இருந்த அவரை அவ்வழியே சென்றவா்கள் உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT