நாகப்பட்டினம்

மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

DIN

திருக்கண்ணபுரத்தில் அருள்மிகு சௌரி ராஜபெருமாள் கோயிலில் மாசிமகப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சௌரி ராஜபெருமாள் திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழா தொடங்கியுள்ளது. முதல் நாளான திங்கள்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. விழாவைத் தொடர்ந்து, பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு 9 மணிக்கு தங்க கருட சேவை வீதியுலா புறப்பாடும், பிப்ரவரி 17-ஆம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும், பிப்ரவரி 19- ஆம் தேதி மாசி மக திருவிழா நிகழ்ச்சியும், பிப்ரவரி 24-ஆம் தேதி தெப்ப திருவிழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கா. பரமானந்தம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT