நாகப்பட்டினம்

சட்டைநாதர் கோயிலில் மாசிமாத  கோ பூஜை வழிபாடு

DIN

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் புதன்கிழமை தமிழ் மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.
சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு மாசி மாதபிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டன. தொடர்ந்து,  கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட  பசுமாடு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு,  தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் பசு, கன்று ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து வலம் வந்து மலர்கள் தூவி பசுவுக்கு வாழைப்பழம், அகத்திகீரை ஆகியவற்றை வழங்கி வழிபட்டனர். இதில் கோ பூஜை வழிபாட்டு குழு பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.  இதேபோல், மாசி மாதபிறப்பையொட்டி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மேள, தாளங்கள் முழங்க பிரம்ம தீர்த்தக்குளத்துக்கு எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியப் பொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அஸ்திரதேவருக்கு  தீர்த்தவாரி கொடுக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT