செம்பொன்னரங்கர் கோயிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு
சீர்காழியை அடுத்த திருநாங்கூர் செம்பொன்னரங்கர் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழியை அடுத்த திருநாங்கூர் செம்பொன்னரங்கர் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அல்லிமாமலராள் உடனாகிய செம்பொன்னரங்கர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி, செம்பொன்னரங்கருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்தலத்தார் ரகுநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.