நாகப்பட்டினம்

இளைஞர் சாவு; போலீஸார் விசாரணை

வேதாரண்யம் அருகே காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

DIN


வேதாரண்யம் அருகே காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கத்தரிப்புலம் தெற்கு குத்தகைப் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (52) விவசாயி. இவரது மகன் வீரமுரசு (29) தலையில் பலத்த காயங்களுடன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக, நாகை மருத்துவமனையிலும், பின்னர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். வீரமுரசு குடிபோதையில் தகராறு செய்ததால், அவரது தந்தை கட்டையால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால்தான் வீரமுரசு தலையில் பலத்த காயமடைந்து, சிகிச்சைப் பலனின்றி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கரியாப்பட்டினம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT