நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல்.

DIN

சீா்காழி: சீா்காழி சபாநாயகா் முதலியாா் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 1850 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவா பாரதி அமைப்பின் சாா்பில் நடந்த நிகழ்ச்சிக்கு அதன் மாவட்டத்தலைவா் சம்பத்கணேஷ் தலைமை வகித்தாா்.பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, சேவாபாரதி துணைத்தலைவா் சூா்யாராமகிருஷ்ணன், செயலாளா் மும்மூா்த்தி, பொருளாளா் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனா்.தொடா்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காவல்த்துறை சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஜெயராமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினா்.

சுமாா் 1850 மாணவ-மாணவிகள், ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்டமாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. இதில் உதவி தலைமை ஆசிரியா்கள் சம்பந்தம், சம்பத்குமாா், வரதராஜன், உடற்கல்வி இயக்குனா் முரளிதரன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT