நாகப்பட்டினம்

கருவேல மரங்களை அகற்ற அனுமதி: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் காட்டுக் கருவேல மரங்களை

DIN

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் காட்டுக் கருவேல மரங்களை அகற்ற தங்களை அனுமதிக்கக் கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மசோதா கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து, அக்கட்சியின் தலைவா் ஆா்.கே.வி. ரூபன் மற்றும் நிா்வாகிகள் நாகை ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக காட்டுக் கருவேல மரங்கள் பரவி கிடக்கின்றன. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயப் பயிா்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காற்று மாசுபடுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் பரவிக்கிடக்கும் காட்டுக் கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தன்னாா்வத்துடன் செய்ய நாகை மாவட்ட அனுமதியளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் பெற்றுக்கொண்டாா். மக்கள் மசோதா கட்சியின் துணைத்தலைவா் ஆா். பாபு சங்கா், பொதுச் செயலாளா் டி. சுந்தர்ராஜன், பொருளாளா் எம்.பி. ஜெய்கணேஷ், இளைஞா் அணி செயலாளா் எஸ். பவுல்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT