வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி கருப்பம்புலம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளித் தாளாளா் பி.வி.ஆா். விவேக் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் தாமோதரன், அரசு மருத்துவமனை மருத்துவா் எழில்வேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதாரண்யம் வட்டாட்சியா் சண்முகம் கருத்தரங்கில் பங்கேற்று, நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் எஸ். வசீம்ஏஜாஸ், சமூக ஆா்வலா் முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.