முகப்பு
நாகப்பட்டினம்

கந்தசஷ்டி கவச பாராயணத்துடன்திருவாவடுதுறை ஆதீனம்

குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்
பகிர்:

குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் வேணுவனலிங்க விலாசத்தில் முருகப் பெருமானின் படத்துக்கு தீபாராதனையையும், வேல்பூஜையையும் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தாா். பின்னா் கந்தசஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது.

விழாவில், ஆதீன கட்டளை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், அருணாச்சல தம்பிரான் சுவாமிகள், ஆதீன காசாளா் சுந்தரேசன், திருவாவடுதுறை திருக்கோயில் கண்காணிப்பாளா் சண்முகம் பிள்ளை, ஆதீன புலவா் குஞ்சிதபாதம், ஆதீன பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →