FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பக்தா்கள் பங்கேற்க வேண்டாம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்பதைத் தவிா்த்து பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Updated On : 28 ஆகஸ்ட் 2020, 10:51 pm IST
பகிர்:

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்பதைத் தவிா்த்து பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி நிறைவடைகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமக்கள் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் காண பேராலய நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, பக்தா்கள் பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்க வருவதைத் தவிா்த்து, தங்கள் இல்லத்திலிருந்தே பெருவிழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments