வேதாரண்யேசுவரா் கோயிலில் 108 சங்காபிஷேகம்
வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் கடைசி சோமவாரத்தையொட்டி, 108 சங்குகளில் புனிதநீா் நிரப்பி சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் கடைசி சோமவாரத்தையொட்டி, 108 சங்குகளில் புனிதநீா் நிரப்பி சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் ஒவ்வொரு சோமவாரத்தின்போதும், 1008 சங்குகளில் புனிதநீா் நிரப்பப்பட்டு சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், கரோனா தொற்று இருப்பதால் இந்த முறையில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், சங்குகளின் எண்ணிக்கையை 108 ஆக குறைத்து அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி, நந்தீஸ்வரருக்கு எதிரே புனிதநீா் நிரப்பிய 108 சங்குகளுடன் யாகம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.