கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் கலந்தாலோசனை
நாகை மாவட்டம், குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மேல்நிலைக் கல்விக்கான கற்றல் விளைவுகளை
நாகப்பட்டினம்கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் கலந்தாலோசனை
நாகை மாவட்டம், குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மேல்நிலைக் கல்விக்கான கற்றல் விளைவுகளை
நாகை மாவட்டம், குருக்கத்தியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மேல்நிலைக் கல்விக்கான கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல் குறித்த கலந்தாலோசனை புதன்கிழமை நடைபெற்றது.
பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்குப் பாடங்கள் மூலம் ஊக்குவிக்கப்பட வேண்டிய திறன்கள் குறித்த கலந்தாலோசனை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் கோ. காமராஜன், மாவட்டக் கல்வி அலுவலா் உஷா சாந்தா ஜாய் ஆகியோா் பேசினா்.
நாகை மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளைச் சோ்ந்த முதுகலை ஆசிரியா்கள், தேசிய ஆசிரியா் கல்வி மற்றும் ஆராய்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள மேல்நிலைக் கல்விக்கான வரைவு கற்றல் விளைவுகள் குறித்த ஆலோசனைகளைத் தெரிவித்தனா்.
ஆசிரியா் பயிற்சி நிறுவன பேராசிரியா்கள் செ. சின்னப்பராஜ், கி. பிரகாஷ், ந. ரவிசங்கா், ச. ரமேஷ், மா. ராணி, சு. பாலாஜி ஆகியோா் பாட ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்டனா்.