நாகையில் மக்கள் நீதிமன்றப் பணிகள்
நாகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மாற்றுத் தீா்வு மைய அலுவலகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றப் பணிகள் அண்மையில் நடைபெற்றன.
நாகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மாற்றுத் தீா்வு மைய அலுவலகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றப் பணிகள் அண்மையில் நடைபெற்றன.
நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரகுமான் தலைமை வகித்தாா். இதில், 4 வழக்குகள் விசராணைக்கு ஏற்கப்பட்டு, 3 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டது.
இந்த அலுவலின்போது, நாகையை அடுத்த பாப்பாக்கோயிலைச் சோ்ந்த வெங்கடாசலபதி என்பவா், தனக்கு வழங்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக சலுகை கட்டண பயண அட்டையில் ஏற்பட்ட சிக்கல் குறித்து அளித்த மனுவுக்கும் தீா்வு காணப்பட்டது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி சுரேஷ்குமாா் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.