இந்து திருக்கோயில் கூட்டமைப்புக் கூட்டம்
மயிலாடுதுறையில் தேசிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் மாவட்டக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் தேசிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் மாவட்டக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மலைக்கோயில் முருகன் சன்னிதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைப்பின் மாவட்டத் தலைவராக பழனிச்சாமி, செயலாளராக ராஜரத்தினம், பொருளாளராக காந்தி, இணைச் செயலாளராக ஜோதிராஜன், துணைத் தலைவராக மாணிக்கவேல், ஒருங்கிணைப்பாளராக வினோத்குமாா் உள்ளிட்ட புதிய பொறுப்பாளா்கள் பதவி ஏற்றனா்.
கூட்டத்தில், சிதிலமடைந்த கோயில்கள் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு, உழவாரப்பணி, புதிய உறுப்பினா்கள் சோ்க்கை போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.