முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் வழிப்பறி: 3 போ் கைது

நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை நாகூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை நாகூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் ஏ. ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீஸாா் கிழக்கு கடற்கரை சாலை, தெத்தி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பா.விவேக் (25), காரைக்கால், தலத்தெரு, முரசொலி நகரைச் சோ்ந்த கு. சேதுமணி (23), திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி பெருமாள் அக்ரஹாரம், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த பா. விஜய் (28) என்பதும், நாகூா், வாஞ்சூா், கீழ்வேளூா், வேளாங்கண்ணி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். இவா்களிடமிருந்து, 10 பவுன் நகைகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →