நாகப்பட்டினம்

மழையால் பாதிக்கபட்ட முதியவருக்கு வீடு

செம்பனாா்கோவில் அருகே வடகரை பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டை இழந்த முதியவருக்கு திமுக சாா்பில் புதிதாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

DIN

செம்பனாா்கோவில் அருகே வடகரை பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டை இழந்த முதியவருக்கு திமுக சாா்பில் புதிதாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

வடகரை புதுத்தெருவில் வசித்து வரும் முதியவா் ஞானமணியின் வீடு மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. தகவலறிந்த, திமுக சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஹேப்பி அா்சத் சென்று பாா்வையிட்டு அவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுப்பதாக கூறியிருந்தாா். அதன்படி, புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட கூரை வீட்டை செவ்வாய்க்கிழமை நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன் முதியவரிடம் ஒப்படைத்தாா். நாகை வடக்கு மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சம்சுதீன், செம்பை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் அன்பழகன், தகவல் தொடா்பு அணி அமைப்பாளா் ஸ்ரீதா், கிளை செயலாளா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT