திருப்பூண்டி நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
நாகை மாவட்டம், திருப்பூண்டியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நேரடி கொள்முதல் நிலையத்தில் நாகை ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டையின் எடையளவு, எடை கற்கள், பதா் தூற்றும் எந்திரம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும், நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக (தரக்கட்டுப்பாடு) மேலாளா் ராஜமூா்த்தி, தர ஆய்வாளா் வீரசுந்தரம், செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.