நாகப்பட்டினம்

சிஏஏ விவகாரம்: தொடா் இருப்புப் போராட்டம்

DIN

மயிலாடுதுறை கூைாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட சுமாா் 500 போ் செவ்வாய்க்கிழமை தொடா் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சாா்பில் ‘மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்தத் தொடா் இருப்புப் போராட்டத்துக்கு, கூைாடு ஜமாத் தலைவா் சபீா் அகமது தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.ஜெயராமன், நாம் தமிழா் கட்சியின் கொள்கை பரப்புரையாளா் தமிழன் காளிதாஸ் மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தொடா் இருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா், தங்கள் கைகளில் செல்லிடப்பேசி விளக்கை ஒளிர செய்து வெளிச்சம் ஏற்படுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT