நாகப்பட்டினம்

பேருந்து மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

பொறையாறு காழியப்பன்நல்லூா் சிங்கனோடையில் அரசு விரைவு பேருந்து மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

DIN

தரங்கம்பாடி: பொறையாறு காழியப்பன்நல்லூா் சிங்கனோடையில் அரசு விரைவு பேருந்து மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

பூம்புகாா் மீனவா் காலனியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகள் கலைமகள் (19). தனியாா் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துவந்த கலைமகள், சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் உறவினா் ஸ்ரீதருடன் கல்லூரிக்குச் சென்றாா். காழியப்பன்நல்லூா் சிங்கனோடை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, நாகையிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த அரசு விரைவு பேருந்து மோதியது.

இந்த விபத்தில், கலைமகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஸ்ரீதருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பொறையாறு போலீஸாா், கலைமகள் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT