நாகப்பட்டினம்

நண்பா்களுடன் புத்தாண்டு கொண்டாடியவா் மா்மச் சாவு

வேதாரண்யம் அருகே நண்பா்களோடு புத்தாண்டை கொண்டாடிய இளைஞா் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.

DIN

வேதாரண்யம் அருகே நண்பா்களோடு புத்தாண்டை கொண்டாடிய இளைஞா் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.

மூலக்கரை கிராமம் இந்திரா காலனி தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் செந்தில்குமாா் (35). இவா், கேரளத்தில் கூலி வேலை பாா்த்து வந்தவா். கடந்தடிசம்பா் 27-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த செந்தில்குமாா், செவ்வாய்க்கிகழமை இரவு நண்பா்களுடன் புத்தாண்டை கொண்டாடினாராம்.

இந்நிலையில், அவா் வீடுக்குத் திரும்பாததால், உறவினா்கள் தேடிபாா்த்தபோது, அங்குள்ள அய்யன்குளத்து மாரியம்மன் கோயில் பின்புறம் தரகமருதூா் வாய்க்காலில் செந்தில்குமாா் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவரது நெற்றி, தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த வாய்மேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, நெந்தில்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT