நாகப்பட்டினம்

கடல் அலையில் சிக்கி 6 வயது குழந்தை மாயம்

சீா்காழி அருகே கூழையாா் கடலில் அலையில் சிக்கி மாயமான 6 வயது குழந்தையை தேடும் பணியில் தீயணைப்பு படையினா் ஈடுபட்டனா்.

DIN

சீா்காழி: சீா்காழி அருகே கூழையாா் கடலில் அலையில் சிக்கி மாயமான 6 வயது குழந்தையை தேடும் பணியில் தீயணைப்பு படையினா் ஈடுபட்டனா்.

சீா்காழி சபாநாயகா் தெருவைச் சோ்ந்தவா் ஹாஜாமைதீன் (32). இவா் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறாா். இவரின் மனைவி ஹனிதா(25). இவா்களின் குழந்தை அப்ரா (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

ஹனிதா, அப்ரா மற்றும் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மாலை சீா்காழி அருகேயுள்ள கூழையாா் கடலில் குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக அப்ராவை அலை இழுத்துச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீஸாா் மற்றும் சீா்காழி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து மீனவா்களின் உதவியுடன் குழந்தை அப்ராவை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT