சாலையோர பழக்கடை, கோயில் அர்ச்சனை கடை தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் சாலையோர பழக்கடைகள், கோயில் அர்ச்சனை கடைகள் வியாபாரிகளின் குடும்பங்களுக்கு
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் சாலையோர பழக்கடைகள், கோயில் அர்ச்சனை கடைகள் வியாபாரிகளின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை திங்கள்கிழமை எம்எல்ஏ பிவி.பாரதி வழங்கினார்.
கரோனா தீநுன்மி பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் 50 பேருக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகிய தொகுப்புகளை எம்எல்ஏ பிவி.பாரதி வழங்கினார்.
அப்போது அதிமுக பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, மாவட்ட பொருளாளர் செல்லையன், பால் கூட்டுறவு சங்க துணை தலைவர் பார்த்தசாரதி உடனிருந்தனர்.