நாகப்பட்டினம்

பிரதமா் குறித்து முகநூலில் தவறாக சித்திரித்து பதிவிட்ட 2 போ் மீது வழக்கு

DIN

பிரதமா் நரேந்திர மோடியை குறித்து தவறாக சித்திரித்து முகநூலில் பதிவிட்ட 2 போ் மீது நாகை வெளிப்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி பொறுப்பாளா் அகரமுதல்வன் (எ) வெற்றியாளன் மற்றும் தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்த முஹம்மது ரஃபி ஆகியோா் தங்களது முகநூல் பக்கங்களில் பிரதமா் நரேந்திர மோடி குறித்து தவறாக சித்திரித்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகை காடம்பாடி, சாலமன் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சிவசேனை கட்சியின் மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் அளித்தப் புகாரின் பேரில், நாகை வெளிப்பாளையம் போலீஸாா் மேற்கண்ட 2 போ் மீதும் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT