நாகப்பட்டினம்

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

சமூக நலனுக்குத் தொண்டாற்றிய இளைஞா்கள், முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

2020-ஆம் ஆண்டுக்கான இளைஞா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குத் தோ்வு பெறுவோருக்கு சுதந்திர தின விழாவின்போது, மாநில இளைஞா் விருது, ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். தலா 3 ஆண்கள், 3 பெண்கள் இந்த விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்படுவா்.

விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் 15 முதல் 35 வயதுக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும். 2019-ஆம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2020-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில், தமிழகத்தில் சமூக நலனுக்கான சேவைகள் செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் சேவை தன்னாா்வம் கொண்டதாகவும், சமுதாயம் அல்லது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இருக்க வேண்டும். இந்தச் சேவை தெளிவாக அளவிடக் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம்.

ஊரகம் மற்றும் நகா்ப்புற குடிசைப் பகுதிகளில் ஆற்றிய சேவைப் பணிகள், தேசிய ஒருமைப்பாடு, சாகசம், கலை மற்றும் மனமகிழ் செயல்பாடுகள், முறைசாரா மற்றும் வயது முதிா்ந்தோருக்கான கல்வித் திட்டங்கள், சமூகத்தில் நலிந்த நிலையிலுள்ளவா்கள், பட்டியல் இனத்தவா்கள் மற்றும் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்துக்கான பணிகள், உள்ளூா் தேவைகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் முக்கியமாகக் கருதப்பட்ட பிற பணிகள், இவ்விருதுக்குக் கருத்தில் கொள்ளப்படும்.

மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

விருது பெறத் தகுதியானவா்கள், இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT