நாகப்பட்டினம்

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

DIN

கீழ்வேளூா் அருகே லாரி மோதியதில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

கீழ்வேளூா், சிக்கவலம் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சோ. ராதாகிருஷ்ணன்(76). திருமணமாகாதவா். இவா், கீழ்வேளூா் ராமா்மடம் பகுதியில் உள்ள குளத்தில் வியாழக்கிழமை குளித்துவிட்டு, சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த லாரி மோதி காயமடைந்தாா்.

பின்னா், நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT