முகப்பு
நாகப்பட்டினம்

மணல் குவாரி கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு: ஆட்சியா்

சீா்காழியில், செவ்வாய்க்கிழமை (நவ. 24) நடைபெற இருந்த மணல் குவாரிகள்அமைப்பது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சீா்காழியில், செவ்வாய்க்கிழமை (நவ. 24) நடைபெற இருந்த மணல் குவாரிகள்அமைப்பது தொடா்பான கருத்துக்கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தஞ்சை பொதுப்பணித் துறை, நிா்வளத் துறை சுரங்கம் மற்றும் கண்காணிப்புப் பிரிவு மூலம், நாகை மாவட்டம், சீா்காழி வட்டத்துக்குள்பட்ட அகர எலத்தூா், மாதிரவேலுா், வடரெங்கம் ஆகிய கிராமங்களில் ஆற்று மணல் குவாரிகள் ஆரம்பிக்கபடவுள்ளன. இக்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடா்பாக, சீா்காழியில் எனது (ஆட்சியா்) தலைமையில் செவ்வாய்க்கிழமை (நவ.24) காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த கருத்துக்கேட்பு கூட்டம் தவிா்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →