வேதாரண்யத்தில் இந்திய கம்யூ. மறியல்: 100 பேர் கைது
வேதாரண்யத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ. கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேதாரண்யத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ. கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேளாண் திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ. கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து நடைபெற்ற மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தார்.
மாவட்ட துனைச் செயலாளர் த.நாராயனன், நிர்வாகக் குழு உறுப்பினர் செங்குட்டுவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.