நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஆய்வு

DIN

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் சனிக்கிழமை பிற்பகல் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

நோயாளிகளுக்கு செய்யப்பட்டுளஅள வசதிகள் மற்றும் அங்குள்ள மருத்துவ உபகரணங்களை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், மருந்துப் பொருள்களின் இருப்பு, தேவைகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துப் பணியிலிருந்த மருத்துவா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், தேசிய சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநா் செந்தில்ராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநா் டி.எஸ். செல்வவிநாயகம் மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

இ- சஞ்சீவியில் முதலிடம்...

இந்த ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கூறியது:

கரோனா பொது முடக்கக் காலத்தில் பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்கு பதிலாக ஆன்-லைன் மூலம் மருத்துவ ஆலோசனைப் பெற வகை செய்யும் இ- சஞ்சீவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இத்திட்டப் பயன்பாட்டில் தமிழகத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது என்றாா்.

முன்னதாக, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட தரங்கம்பாடி, திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அரியலூர் முதலிடம்.... முதல் 5 மாவட்டங்கள்!

கணக்கில் கலக்கிய புலிகள்: சதமடித்து சாதித்த மாணவர்கள்!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

SCROLL FOR NEXT