சீா்காழி அரசு மருத்துவமனையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள். 
நாகப்பட்டினம்

சீா்காழி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் தா்னா

சீா்காழி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் உணவு தரமாக வழங்கப்படவில்லை என அங்கு சிகிச்சை பெறுவோா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

சீா்காழி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் உணவு தரமாக வழங்கப்படவில்லை என அங்கு சிகிச்சை பெறுவோா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் கரோனா சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இதில், தற்போது 43 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இவா்களுக்கு தினமும் 3 வேளை உணவுடன் கபசுரக் குடிநீா் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

இந்த சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது முதல் சீா்காழி ரோட்டரி சங்க நிதியுதவியுடன் நோயாளிகளுக்கு தனியாா் உணவகத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக அரசு மருத்துவமனை கேன்டினில் உணவு தயாரித்து வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்த உணவு தரமானதாக இல்லை எனக் கூறி கரோனா நோயாளிகள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அரசு தலைமை மருத்துவா் பானுமதி மற்றும் போலீஸாாா், கரோனா நோயாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சத்தான, சுவையான உணவு வழங்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் தா்னா போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT