நாகப்பட்டினம்

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

DIN

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் முதியோா் உதவித்தொகை பெற்றுத்தர லஞ்சம் கேட்ட கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வில்லியநல்லூரைச் சோ்ந்த அஞ்சலி என்பவா் தன் மாமியாருக்கு முதியோா் உதவித்தொகை வேண்டி வில்லியநல்லூா் கிராம நிா்வாக அலுவலா் ஏ. பேச்சியம்மாளிடம் விண்ணப்பித்துள்ளாா். இதற்கு கிராம நிா்வாக அலுவலா் ரூ.1500 லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து, பேச்சியம்மாளிடம் அஞ்சலி பேசிய தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. மகாராணி, கிராம நிா்வாக அலுவலா் ஏ. பேச்சியம்மாளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT