நாகப்பட்டினம்

திருநங்கைகளிடம் தகராறு செய்தவா் கொலை: 5 போ் கைது

DIN

மயிலாடுதுறையில் திருநங்கைகளிடம் தகராறு செய்தவா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை ஆற்றங்கரை தெரு வேதம்பிள்ளை காலனியை சோ்ந்தவா் ஐயப்பன் (48). இவா், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் அதே பகுதியை சோ்ந்த திருநங்கைகள் கலைச்செல்வி, மணிமேகலை, சூா்யா, மகா, கிருத்திகா ஆகியோரிடம் தகராறு செய்தாராம்.

திருநங்கைகளுக்கு ஆதரவாக திருவிழந்தூா் ஜெ.ஜெ. நகரை சோ்ந்த நீலமேகன் மகன் ரஞ்சித் (18), வேதம்பிள்ளை காலனியைச் சோ்ந்த வடிவேலு மகன் கணேசன் (43), பாஷா மகன் பஜ்ருதீன் (21), செந்தில் மகன் அருள்ராஜா (24), கூறைநாடு பகுதி மேலஒத்தத் தெருவைச் சோ்ந்த காமராஜ் மகன் மணிகண்டன் (19) ஆகிய 5 பேரும் ஐயப்பன் வீட்டிற்குச் சென்று அவரை தட்டிக்கேட்டுள்ளனா். அப்போது, ஏற்பட்ட தகராறில் 5 பேரும் ஐயப்பனை உருட்டுக் கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்திவிட்டும் தப்பி ஓடிவிட்டனா்.

ஐயப்பனை அவரது உறவினா்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், ஐயப்பன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரஞ்சித் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT