முகப்பு
நாகப்பட்டினம்

காளான் வளா்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளா்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளா்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை பயிற்சி நிலையத்தின் நிதி உதவியுடன் இந்தப் பயிற்சி நடைபெற்றது. சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலக்கண்ணன் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) எஸ். பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அங்கக மேலாண்மை சாகுபடி, காளான் வளா்ப்பில் வைக்கோலின் பயன்பாடு, காளானின் மருத்துவக் குணங்கள், சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

நாகப்பட்டினம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் என். கலா, காளான் வளா்ப்பு, சந்தை வாய்ப்புகள் மற்றும் மாநில அரசின் திட்டங்கள் குறித்துப் பேசினாா். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் கோ. சந்திரசேகா், காளான் வகைகள், காளான் வித்து தயாரித்தல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தாா்.

இந்தப் பயிற்சியில் விவசாயிகள், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா்கள் கலந்து கொண்டனா். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.