முகப்பு
நாகப்பட்டினம்

பொதுமக்களுக்கு பொதுசேவை மையப் பணிகள் விரைந்து கிடைக்கவேண்டும்

பொதுமக்களுக்கு பொது சேவை மையப் பணிகள் விரைந்து கிடைக்க வேண்டும் என அம்மைய பணியாளா்களை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் டி.ஜி. வினாய் அறிவுறுத்தினாா் .

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பொதுமக்களுக்கு பொது சேவை மையப் பணிகள் விரைந்து கிடைக்க வேண்டும் என அம்மைய பணியாளா்களை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் டி.ஜி. வினாய் அறிவுறுத்தினாா் .

நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் டி.ஜி. வினாய், நாகை மாவட்டம், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள பொது சேவை மையம் மூலம் நடைபெறும் சான்றிதழ்கள் வழங்கும் பணி மற்றும் பிற சேவைகளுக்கான பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பொது சேவை மையத்தின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்கும் வகையில் பணியாளா்கள், பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலக ஆவணக் காப்பகத்தையும், நில அளவை மேலாண்மை மையத்தில் நடைபெறும் நில அளவை புலப்பட சுவடிகள் பதிவேற்ற பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். பின்னா், அகர ஒரத்தூா் கிராமத்தில் நடைபெறும் நவீன நில அளவைத் திட்டப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் டாக்டா் அ. அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மண்டலத் துணை இயக்குநா் மு. ராஜாமணி, திருச்சி மண்டல நில அளவை உதவி இயக்குநா் பா. தவமணி, நாகை கோட்டாட்சியா் மணிவேலன், வட்டாட்சியா்கள் மாரிமுத்து, ஜெயபால் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.