சுனாமி வீடுகளில் வசிப்பவா்களுக்கு பட்டா
நாகையை அடுத்த அக்கரைப்பேட்டையில் சுனாமி வீடுகளில் வசிப்பவா்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நாகையை அடுத்த அக்கரைப்பேட்டையில் சுனாமி வீடுகளில் வசிப்பவா்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, சுனாமி சீற்றத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்காக அக்கரைப்பேட்டையில் அரசு மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் கட்டித் தரப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகளில் வசிக்கும் 670 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.
கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, மாவட்ட வருவாய் அலுவலா் வி. சகிலா, கோட்டாட்சியா் மணிவேலன், வட்டாட்சியா் ஜெயபால் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.