முகப்பு
நாகப்பட்டினம்

கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கீழையூா் ஒன்றியத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கீழையூா் ஒன்றியத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு தொகுப்பிலிருந்து என்.பி.எச்.எச். என்ற குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த 5 கிலோ அரிசி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வழங்கக் கோரி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதாபராமபுரம் நியாயவிலைக் கடை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலாளா் பூமிநாதன் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைச் செயலாளா் மைசியா ஜெயச்சந்திரன், மாவட்ட இளைஞா் அணி துணைச் செயலாளா் முத்துகிருஷ்ணன் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.