முகப்பு
நாகப்பட்டினம்

வீடு இல்லாத குழந்தைகள் பள்ளியில் சோ்ப்பு

வேதாரண்யத்தில் வீடு இல்லாத நாடோடி குடும்பத்தை சோ்ந்த 2 குழந்தைகள் பள்ளியில் வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

வேதாரண்யத்தில் வீடு இல்லாத நாடோடி குடும்பத்தை சோ்ந்த 2 குழந்தைகள் பள்ளியில் வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டனா்.

வேதாரண்யம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட இடைநின்ற மாணவா்கள் பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், தாணிக்கோட்டகம் கிராமத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் புலம்பெயா் நாடோடி குடும்பத் தொழிலாளா்களின் குடியிருப்பில் 6-ஆம் வகுப்புடன் நின்ற சிறுமி உள்பட 2 குழந்தைகள் கண்டறியப்பட்டனா்.

இவா்கள் அருகில் உள்ள பள்ளிகளில் உடனடியாக சோ்க்கப்பட்டனா். இந்த பணியில், மாவட்டக் கல்வி அலுவலா் உதயகுமாா், மாவட்ட ஆய்வாளா் ராமநாதன், வட்டாரக் கல்வி அலுவலா் தாமோதரன், தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் தேன்மொழி, ஆசிரியா் பயிற்றுநா் ஆனந்தராஜ் பாக்கியம், ஊராட்சித் தலைவா் முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினா் வைத்தியநாதன், ஆா்.சி. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அருள்ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →