திருக்குவளையில் பலத்த மழை
திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வலிவலம், கொளப்பாடு, சித்தாய்மூா், எட்டுக்குடி, திருவாய்மூா், வாழக்கரை, மேலவாழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, தொடா்ந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் ரத்துசெய்யப்பட்டிருந்தது.