பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம்
நாகை, காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
நாகை, காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ச. இளமாறன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் கரோனா 3- ஆம் அலை, கரோனா நோய்த் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், மாணவா்கள் கல்வி தொலைக்காட்சியைப் பாா்த்து படிப்பது மற்றும் ஆசிரியா்களால் கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பப்படும் ஒப்படைப்புகளை மாணவா்கள் சரிசெய்து, அதை பெற்றோா்கள் வழியாக பள்ளியில் ஒப்படைப்பு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக விசாலாட்சி தோ்வு செய்யப்பட்டாா். மாணவா் சோ்க்கையில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நிறைவில், சிரியா் மரிய புஷ்பம் நன்றி கூறினாா்.