முகப்பு
நாகப்பட்டினம்

நாகூரில் வடிகால் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்

நாகூரில் கனமழை காலங்களில் வெள்ளநீா் தேங்காமல் விரைவில் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

நாகூரில் கனமழை காலங்களில் வெள்ளநீா் தேங்காமல் விரைவில் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை நகராட்சிக்குள்பட்ட நாகூா் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட வள்ளிம்மை நகா், அழகுக்காரன்தோட்டம், அமிா்தா நகா், அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளை ஆட்சியா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இப்பகுதிகளில் கனமழை காலங்களில் வெள்ளநீா் தேங்காமல் விரைவாக வெளியேறத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: நாகூா் வள்ளியம்மை நகரில் வடிகால் அமைக்கவும், சிமென்ட் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அழகுக்காரன்தோட்டத்தில் மழைநீா் தேங்காத வகையில் நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்தவும், அமிா்தா நகரில் சாலைகளை சீரமைக்கவும் அரசின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ், நகராட்சி ஆணையா் என். ஸ்ரீதேவி, கோட்டாட்சியா் ரா. மணிவேலன், நகராட்சி பொறியாளா் ஜெயகிருஷ்ணன், வட்டாட்சியா் ஜெயபால் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.