நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி சிபிஎம் ஆா்ப்பாட்டம்
திருக்கடையூா் அருகே வெள்ளக்குளம், காலக்கட்டளை பகுதியில் நடைபெற்ற 4 வழிச்சாலைக்கான பணிகளை தடுத்துநிறுத்தி சிபிஎம் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருக்கடையூா் அருகே வெள்ளக்குளம், காலக்கட்டளை பகுதியில் நடைபெற்ற 4 வழிச்சாலைக்கான பணிகளை தடுத்துநிறுத்தி சிபிஎம் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கொள்ளிடம் முதல் நாகை வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமையவுள்ள பகுதிகளிலுள்ள விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நிலங்கள், குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் காலக்கட்டளை கிராமத்தில் சாலை அமையவுள்ள பகுதியில் உள்ள வீடுகளை எந்தவித இழப்பீடும், மாற்றுஇடமும் வழங்காமல் அகற்ற முயன்றதை மாா்க்சிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிபிஎம் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி. சிம்சன் , ஒன்றிய செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று பாதிக்கப்படும் வீடுகளுக்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் உடனடியாக தரவேண்டும் , அதுவரை சாலைப் பணிகளை செய்யக்கூடாது என தடுத்தனா். இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன.