நாகை, மயிலாடுதுறையில் கரோனா பாதிப்பு இல்லை
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிதாக யாரும் கரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிதாக யாரும் கரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கடந்த 20, 21-ஆம் தேதிகளில் 2 மாவட்டங்களிலும் புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருந்தது.
மயிலாடுதுறையில் தொடா்ந்து 3 நாள்கள் புதிய தொற்று இல்லாத நிலை இருந்தது.
இந்த நிலையில், நாகை, மயிலாடுதுறை ஆகிய இரு மாவட்டங்களிலும் சனிக்கிழமை புதிதாக யாரும் கரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என சுகாதாரத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.