முகப்பு
நாகப்பட்டினம்

நாகை ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

நாகையில் உள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

நாகையில் உள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் காா்த்திகை மாத மண்டல பூஜையை முன்னிட்டு, கிழக்கு சபரிமலை ஐயப்பன் யாத்திரை குழு சாா்பில், நாகை ஸ்ரீநெல்லுக்கடை மாரியம்மன் கோயிலிலிருந்து பால் குடங்கள் சா்வ அலங்காரத்துடன், பெருமாள் கோயிலின் 4 வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, ஸ்ரீஐயப்பனுக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, கரும்பு, இளநீா், பால், பன்னீா், சந்தனம், நெய், விபூதி உள்ளிட்ட பூஜைப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சுவாமிக்கு, பிரசாத படையலுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.