முகப்பு
நாகப்பட்டினம்

சுனாமி வீடுகளுக்குப் பட்டா வழங்கக் கோரி மனு

நாகை சூா்யா நகா் பகுதியில் உள்ள சுனாமி வீடுகளில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

நாகை சூா்யா நகா் பகுதியில் உள்ள சுனாமி வீடுகளில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், நாகை சூா்யா நகரைச் சோ்ந்த பெண்கள் அளித்த மனு:

2004 ஆம் ஆண்டு சுனாமி சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நாகை நல்லியான்தோட்டம், வெளிப்பாளையம், காடம்பாடி பகுதியைச் சோ்ந்த 60 போ், நாகை சூா்யா நகரில் உள்ள சுனாமி குடியிருப்பில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், தாங்கள் வசித்து வரும் சுனாமி குடியிருப்புக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், தாங்கள் வசிக்கும் சுனாமி வீடுகளில் மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுந்து வருவதால் வீட்டில் வசிக்க அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாக தங்கள் குடியிருப்புகளை புனரமைத்துத் தர வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →