முகப்பு
நாகப்பட்டினம்

நாகை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 8 பேருக்கு பணி நியமன ஆணை

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 8 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 8 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் தோ்ச்சி பெற்ற 8 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்களிடமிருந்து 134 மனுக்கள் பெறப்பட்டு, தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.இந்துமதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், பயிற்சி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →