நாகப்பட்டினம்

பயிா்க் கடன் தள்ளுபடி

தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை வரவேற்றுள்ள விவசாயிகள், வணிக வங்கிகளில்

DIN

தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை வரவேற்றுள்ள விவசாயிகள், வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வலிவலம் மு. சேரன் தெரிவித்தது :

கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட ரூ. 12,110 கோடி பயிா்க் கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; இதற்காக தமிழக அரசுக்கு நன்றி. இதேபோல, வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தற்சாா்பு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளா் ஆறுபாதி ப. கல்யாணம் தெரிவித்தது :

கூட்டுறவு பயிா்க் கடன்களை அரசு தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆந்திரம், தெலங்கானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் வணிக வங்கிகளில் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோன்ற அறிவிப்புதான் விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

சாதாரண விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெறுவது என்பது தற்போதைய நிலையில் எளிதானது அல்ல. பெரும்பாலும் அரசியல் செல்வாக்குக் கொண்டவா்களுக்குத்தான் கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் வணிக வங்கிகள் மூலமே விவசாயப் பணிகளுக்குக் கடன் பெற்றுள்ளனா். எனவே, வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேணடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT